JNU மாணவர்களுக்கு ஆதரவான வாசகத்துடன் சட்டப்பேரவைக்கு வந்த தமிமுன் அன்சாரி.!

Default Image
  • இன்று தமிழக சட்டப்பேரவை 2-ஆம் நாளாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
  • சட்டப்பேரவைக்கு வந்த எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி JNU மாணவர்களுக்கு ஆதரவான வாசகத்துடன் வருகை தந்தார்.

இந்த வருடத்தின் முதல் தமிழக சட்டசபை கூட்டுதொடர் நேற்று சபாநாயகர் தலைமையில் தனபால் தொடங்கியது.வருடந்தோறும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடரின் போது ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் நேற்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார்.

இந்த கூட்டுத்தொடரில் முதலமைச்சர் எட்டப்படி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல சட்டசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவை 2-ஆம் நாளாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று சட்டப்பேரவைக்கு வந்த எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி JNU மாணவர்களுக்கு ஆதரவான வாசகத்துடன் வருகை தந்தார்.நேற்று குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு உடை அணிந்து  வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்