தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் – 2 உறுப்பினர்கள் நியமனம்!

Default Image

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு இரண்டு உறுப்பினர்கள் நியமனம் செய்ய பரிந்துரை.

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு இரண்டு உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழுக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டப்பேரவைத் தலைவர் அறையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்.

இந்த நிலையில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்வது குறித்து நடைபெற்ற தேர்வுக் குழுக் கூட்டத்தில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ராஜ இளங்கோ மற்றும் வி.கண்ணதாசன் ஆகியோரை நியமனம் செய்ய இக்குழு பரிந்துரை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்