சிபிஐ-க்கு மாற்ற கோரிய வழக்கு -தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

Default Image
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய முறைகேடு தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2019-ம் ஆண்டு 8,888 பணியிடங்களுக்கு  அறிவிப்பாணையை வெளியிட்டது.எனவே 2019 -ஆம் நடைபெற்ற காவலர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக 15 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.அவர்களது வழக்கில், 2019 -ஆம் நடைபெற்ற காவலர் தேர்வில் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும்.விழுப்புரம் மற்றும் வேலூரில் ஒரே பயிற்சி நிறுவனத்தில் படித்தவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றதாக வழக்கில் தெரிவிக்கப்பட்டது.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 8,888 சீருடைப் பணியாளர்கள் தேர்வு நடைமுறையை நிறுத்திவைக்க உத்தரவு பிறப்பித்தது. பின்னர் நடைபெற்ற விசாரணையில் ,காவலர்களுக்கான தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.  
 
இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையில்,தமிழக அரசு அளித்த பதிலில், பணியாளர்கள் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்று தெரிவித்தது.பின்னர் வழக்கின் விசாரணையில்   மார்ச் 26ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்