ஆறுமுகசாமி ஆணையத்திற்கு புதிய செயலாளர் நியமனம் – தமிழக அரசு உத்தரவு!

Default Image

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு புதிய செயலாளராக சஷ்டி சுபன் பாபுவை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணமா தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு புதிய செயலாளராக சஷ்டி சுபன் பாபுவை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தின் செயலாளராக இருந்த சிவசங்கரன் மருத்துவ விடுப்பில் சென்றதால் புதிய செயலாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணைகள் செயலாளர் இல்லாமல் நடந்து வந்த நிலையில், புதிய செயலாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, ஜெயலலிதா மரணம் தொடர்பாக கடந்த வாரம் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில், அடுத்தகட்ட விசாரணை என்ன என்பது குறித்து இன்று ஆறுமுகசாமி ஆணையம் ஆலோசனை நடத்தவுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில், ஆணைய தரப்பு, சசிகலா மற்றும் அப்போலோ மருத்துவமனை வழக்கறிஞர்கள் பங்கேற்க உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்