சென்னை :தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பதற்கான தகுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான கூடுதல் விதிவிலக்குகள் வழங்கி அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி, மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தமிழக அரசு மூன்று முக்கிய தளர்வுகளை அளித்துள்ளது.
இந்தத் திட்டம், பெண்களின் பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக அந்தஸ்தை உயர்த்துவதற்காக 2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம், தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படுகிறது.
முன்னதாக, நான்கு சக்கர வாகனம் (கார், ஜீப் போன்றவை) வைத்திருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் இந்தத் திட்டத்திற்கு தகுதியற்றவர்களாகக் கருதப்பட்டனர். ஆனால், தற்பொழுது தமிழ்நாடு அரசு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் புதிய தளர்வுகளை அறிவித்து, இந்தத் திட்டத்தின் பயனை விரிவுபடுத்தியுள்ளது.
புதிய தளர்வுக் :
அரசுத்துறைகளில் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று, தற்போது ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களை சேர்ந்த, ஓய்வூதியதாரர்கள் அல்லாத பெண்கள் இத்திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம்.
அரசு மூலமாக மானியம் பெற்று 4 சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களை சேர்ந்த பெண்களும் தகுதியானவர்கள்.
இந்திராகாந்தி தேசிய விதவை ஓய்வூதியம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களைச் சேர்ந்த ஓய்வூதியம் பெறாத பெண்களும் விண்ணப்பிக்கலாம்.
கணவரால் கைவிடப்பட்ட, 50 வயதிற்கு மேலாகியும் திருமணம் ஆகாத பெண்களுக்கான ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள மற்ற பெண்கள் விண்ணப்பிக்கத் தகுதி வாய்ந்தவர்கள்.
unknown node