தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடுக்கடலில் தாக்குதல் !

Default Image

இலங்கை கடற்படை நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களின் வலைகளை அறுத்து  விரட்டியடித்துள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று மீன்வளத்துறை அலுவலகத்தில் 498 டோக்கன்களை பெற்று மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இந்நிலையில் 10-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் நெடுந்தீவு அருகே 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி வலைகளை அறுத்து மீனவர்களை விரட்டியடித்தனர். மீனவர்கள் இரட்டை மடி வலை பயன்படுத்துவதே பிரச்சினைக்கு காரணம் என்று மீனவர் சங்கத் தலைவர் போஸ் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்