இரண்டாவது நாளாக இன்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!!

Default Image

பொங்கல் திருநாளில் இரண்டாவது நாளாக சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 24,708 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து நேற்று 3,529 சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கின. மாதவரம் புதிய பேருந்துநிலையம், தாம்பரம் புதிய பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம்,  பூவிருந்தவல்லி பேருந்து நிலையம், கோயம்பேடு எம்ஜிஆர் பேருந்து நிலையம், கே.கே.நகர் பேருந்து நிலையம் ஆகியவற்றில் இருந்து பொங்கல் சிறப்பு பேருந்துகள் புறப்பட்டு சென்றன.இந்நிலையில் இன்று  3 ஆயிரத்து 741 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. நாளை 3 ஆயிரத்து 411 பேருந்துகளும், 14ஆம் தேதி 3 ஆயிரத்து 582 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் சிரமமின்றி தங்கள் ஊருக்கு செல்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்