#BREAKING: சிவசங்கர் பாபாவுக்கு காவல் நீட்டிப்பு; மேலும் 2 வழக்குகளில் ஜாமீன்..!

Default Image

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு  நீட்டிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு  கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளி தாளாளர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் அளித்த பாலியல் புகாரை தொடர்ந்து அவர்மீது போக்சோ வழக்கு உள்பட 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், சிவசங்கர் பாபாவை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் போலீசார் இன்று  ஆஜர்படுத்தினர். அப்போது சிவசங்கர் பாபாவுக்கு நவம்பர் 16 வரை காவல் நீட்டித்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், சிவசங்கர் பாபாவுக்கு 2 வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பெண்களை மானபங்கம் செய்ததாக சிவசங்கர் பாபா மீது தொடரப்பட்ட இரண்டு வழக்குகளை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. சிவசங்கர் பாபா மீது உள்ள 3 போக்ஸோ வழக்கில் ஏற்கனவே இரண்டில் ஜாமீன் பெற்றுள்ளார். வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததால் சிவசங்கர் பாபாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்