#BREAKING: பிற்பகல் 1 மணிக்கு மாணவியின் உடல் மறுகூராய்வு.. பெற்றோர் இல்லாமல் நடத்த அனுமதி!

Default Image

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உடலை பெற்றோர் இல்லாமல் மறுகூராய்வு செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாணவி உடல் பிற்பகல் ஒரு மணிக்கு மறுகூராய்வு செய்யப்படும் என மருத்துவமனை டீன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மறுகூராய்வு செய்வது தொடர்பான நோட்டிஸ், மாணவியின் பெற்றோர் வீட்டில் ஒட்டப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்படி, மறு உடற்கூராய்வு செய்யும் இடத்தில் பெற்றோர் இருக்கலாம் என்றும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் மறு உடற்கூராய்வை பெற்றோர் இல்லாமலே நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. உடல் மறு பிரேத பரிசோதனை செய்யும்போது பெற்றோர் வந்தால் அனுமதிக்க வேண்டும் எனவும் நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

பெற்றோர் எங்கு இருக்கிறார்கள் என தெரியவில்லை என காவல்துறை தரப்பில் நீதிபதியிடம் முறையீடு செய்த நிலையில், பெற்றோர் இல்லாமலே நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, உச்சநீதிமன்றம் தடை உத்தரவு எதுவும் விதிக்காததால் மறுஉடற் கூராய்வு நடைமுறையை தொடங்க வாய்மொழியாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பிற்பகல் ஒரு மணிக்கு மாணவியின் உடல் மறுகூராய்வு செய்யப்பட உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்