தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை.. மீனவர்களுக்கு எச்சரிக்கை! வானிலை மையம் அறிவிப்பு!

Default Image

சூறை காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் 18-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் கடன் த 4 மணிநேரத்தில் அதிகபட்சமாக குன்னுரில் 30 செ.மீ, நீடாமங்கலத்தில் 16 செ.மீ, திருமானுரில் 15 செ.மீ மழை பதிவானது.

மேலும், அந்தமான் கடல் பகுதிகளில், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபோன்று, மத்திய வாங்க கடல், தென்கிழக்கு அரபிக்கடலில் மணிக்கு 65 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் எங்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்