கைதி கொலை வழக்கு.., சிபிசிஐடி விசாரணை கோரி மனு..!

Default Image

பாளையங்கோட்டை சிறையில் நடந்த மோதலில் கைதி கொல்லப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை சிறையில் நடந்த மோதலில் பலத்த காயமடைந்த முத்து மனோ நெல்லை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, நாங்குநேரி சேர்ந்த வழக்கறிஞர் பாபநாசம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையிட்டார். பின்னர் நீதிபதி உத்தரவை அடுத்து தனது முறையீட்டை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் பாபநாசம் மனு தாக்கல் செய்தனர்.

வழக்கறிஞர் பாபநாசம் மனுவில் கூறுகையில், கொல்லப்பட்ட முத்து மனோ உடற்கூறாய்வை முழுமையாக வீடியோ பதிவு செய்யவும், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரியும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சிறைத்துறை அலுவலர்களின் கவனக்குறைவால் தான் மோதல் நடந்ததாக  தெரிவித்துள்ளார். பணியில் கவனக்குறைவாக இருந்த சிறை  அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்