தொற்று நோய் தடுப்பு – தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தல்!

The Chief Secretary instructed that serious action be taken to prevent the spread of the disease.

தொற்றுநோய் பரவாமல் தடுப்பு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை செயலாளர் அறிவுறுத்தல்.

வெள்ள பாதிப்புள்ள பகுதிகளில் தொற்றுநோய் பரவாமல் தடுப்பு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை செயலாளர் வெ.இறையன்பு அறிவுறுத்தி உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் இறையன்பு தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்பு கடி ஊசி போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. காய்ச்சல், வயிற்றுப்போக்கு, உடல் உபாதைகள் ஏற்பட்டால் உடனே அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். மேலும், மருத்துவ சேவைக்கு 044-2951 0400, 2951 0500, 9444340496, 8754448477-இல் தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.