தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு – மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு.!

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு விதித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

Diwali firecrackers

சென்னை : தீபாவளி பண்டிகை (தீப ஒளித் திருநாள்) அன்று (அக்.31) இரண்டு மணி நேரம் பட்டாசு வெடிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், குறைந்த ஒலி, மாசு ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகளை வெடிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம். பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுப்படுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

மேலே குறிப்பிட்டப்படி, அரசு வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்