திட்டமிட்டபடி திருப்புதல் தேர்வு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

Default Image

திட்டமிட்டபடி ஜனவரி 19-ஆம் தேதி திருப்புதல் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு முதலாம் திருப்புதல் தேர்வு (return exam) ஜனவரி 19 முதல் தொடங்குகிறது என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவித்திருந்தார். 10ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு ஜனவரி 19 – 27 வரையிலும், 2ம் திருப்புதல் தேர்வு மார்ச் 21- 26 வரை நடைபெறும்.

இதுபோன்று 12ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு ஜனவரி 19 முதல் 28 வரையிலும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கான 2ம் திருப்புதல் தேர்வு மார்ச் 21 முதல் 29 வரை நடைபெறும் என்று தேர்வுத்துறை அறிவித்திருந்தது.

இதனிடையே தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று நாள்தோறும் அதிகரித்து வரும், ஜனவரி 31 வரை கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்து தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும். கூடுதல் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

இதனால், திட்டமிட்டபடி 10, 12 வகுப்புகளுக்கும் திருப்புதல் தேர்வு நடைபெறுமா? என்று மாணவர்கள் மத்தியில் சந்தேகம் இருந்து வந்தது. இந்நிலையில், தமிழகத்தில் 10 மற்றும் 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி ஜனவரி 19-ஆம் தேதி திருப்புதல் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்