ஆளுநரிடமிருந்து எந்த தகவலும் அரசுக்கு நேரடியாக வரவில்லை – சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம்

Default Image

7 பேர் விடுதலை குறித்து ஆளுநரிடமிருந்து எந்த தகவலும் அரசுக்கு நேரடியாக வரவில்லை என்ற சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் பன்வரிலால் புரோகித்திடம் இருந்து எந்த தகவலும் அரசுக்கு வரவில்லை. உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தாக்கல் செய்த ஆவணம் அரசுக்கு தந்தால் அதனை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, 7 பேர் விடுதலை குறித்து ஆளுநரிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்த நிலையில், குடியரசு தலைவருக்கு முடிவு எடுக்க உரிமை உள்ளது என உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு பிரதான பாத்திரம் ஒன்றை தாக்கல் செய்து, அதில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்