எச்சரிக்கை!! தமிழகத்தின் 4 மாவட்டங்களில் புதிய வகை கொரோனா.!

Corona -JN1 Variant

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது நாளுக்கு நாள் சற்று அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா வைரஸானது பரிணாமம் அடைந்து தற்போது JN.1 எனும் கொரோனா மாறுபாடு பரவி வருகிறது..

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் (டிசம்பர் 26 ஆம் தேதி) மொத்தம் 109 JN.1 வகை மாறுபாடு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்ட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் இன்று தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில், தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் புதிய வகை கொரோனா பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர், திருச்சி, கோவை, மதுரையில் இணை நோய் தொடர்பாக சிகிச்சைக்கு வந்தவர்களிடம் பரிசோதனை நடத்தப்பட்டது.

என்ன ரகசியம் தெரியுமோ சொல்லுயா… ஓபிஎஸ்-க்கு பதிலடி கொடுத்த இபிஎஸ்.!

பரிசோதனை மாதிரிகள் புனேவில் உள்ள மையத்துக்கு அனுப்பப்பட்ட நிலையில், 4 பேருக்கு புதிய தொற்று உறுதியாகியுள்ளது. மீண்டும் கொரோனா பரவ ஆரம்பித்துள்ளதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், குஜராத்தில்36, கர்நாடகாவில் 34, கோவாவில் 14, மகாராஷ்டிராவில் 9, கேரளாவில் 6, ராஜஸ்தானில் 4, தமிழ்நாட்டில் 4 மற்றும் தெலுங்கானாவில் இரண்டு என கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 109 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 15042025
Today Live 14042025
Madurai MP Su Venkatesan
Harris Jayaraj
Nellai Palayamkottai 8th student
MK Stalin
sanjiv goenka rishabh pant
Porkodi Armstrong