இந்தியாவில் 602 பேருக்கு கொரோனா, 5 பேர் உயிரிழப்பு.!

coronavirus

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது நாளுக்கு நாள் சற்று அதிகரித்து வருகிறது. அதனால் அந்தந்த மாநிலங்களில் குறிப்பிட்ட அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த கொரோனா வைரஸானது பரிணாமம் அடைந்து தற்போது JN.1 எனும் கொரோனா மாறுபாடு பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 602 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும்,கொரோனா வால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவின் மொத்த உயிரிழப்பு  எண்ணிக்கை 533,371-ஆக உயர்ந்துள்ளது. டிஸ்சார்ஜ் … Read more

எச்சரிக்கை!! தமிழகத்தின் 4 மாவட்டங்களில் புதிய வகை கொரோனா.!

Corona -JN1 Variant

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது நாளுக்கு நாள் சற்று அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா வைரஸானது பரிணாமம் அடைந்து தற்போது JN.1 எனும் கொரோனா மாறுபாடு பரவி வருகிறது.. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் (டிசம்பர் 26 ஆம் தேதி) மொத்தம் 109 JN.1 வகை மாறுபாடு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்ட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் இன்று தகவல் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் புதிய வகை கொரோனா பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, … Read more

கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதி! பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பதிவு!

vanathi srinivasan

பாஜக மகளிரணி தேசிய தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான், மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தெலுங்கானா மற்றும் சட்டீஸ்கரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், சமீபத்தில் கோவை திரும்பினார். தெலுங்கானா மற்றும் சட்டீஸ்கரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிறகு கோவை திரும்பிய வானதி சீனிவாசனுக்கு தீவிர காய்ச்சலும், உடல் வலியும் ஏற்பட்டதாக … Read more

சீனாவில் கொரோனா அதிகரிப்புக்கு இந்த 4 வகைகள் தான் காரணம் – இந்தியா

சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதற்கு 4 வகைகள் தான் காரணம் என்று இந்தியாவின் கொரோனா குழு தலைவர் தகவல். சமீப நாட்களாக சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்த சமயத்தில் சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்கு நான்கு வகைகள் காரணமாகின்றன என்று மத்திய அரசின் கொரோனா குழுவின் தலைவரான என்கே அரோரா கூறியுள்ளார். அதாவது, ஓமிக்ரான் மாறுபாட்டின் BF.7 திரிபு 15% பாதிப்புகளுக்கு காரணம் என்றும்  பெரும்பாலான பாதிப்புகள் (50%) … Read more

தாய்லாந்து, மியான்மரில் இருந்து பீகாருக்கு வந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

பீகாரில், கயாவில் உள்ள விமான நிலையத்தில் கொரோனா சோதனை செய்ததில் நான்கு வெளிநாட்டினருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மத்திய அரசின் அறிவுறுத்தலின் பெயரில், சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு கண்டிப்பாக கொரோனா பரிசோதனை எடுக்கபட்டு வருகிறது அதன்படி, பீகாரில், கயாவில் உள்ள விமான நிலையத்தில் சோதனை செய்ததில் நான்கு வெளிநாட்டினருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அவர்கள் … Read more

#FakeNews: மத்திய சுகாதாரத்துறை பெயரில் பரவிய போலியான தகவல்கள்.!

மத்திய சுகாதாரத்துறை பெயரில் பரவிய சர்வதேச பயணிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் போலியானது. கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், சர்வதேச பயணிகளுக்கு கொரோனாவுக்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டதாக இன்று காலை தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை பெயரில் பரவிய சர்வதேச பயணிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் போலியானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு வரும் பயணிகளின் கொரோனா சோதனை குறித்த செய்தி சமூக ஊடக தளங்களில் பரவி வருகிறது. இது தவறான தகவல் … Read more

கர்நாடகாவில் மாஸ்க் கட்டாயம்.! கேரளாவில் சோதனை அதிகரிப்பு.! தமிழகத்தில்… முன்னெச்சரிக்கை தீவிரம்.!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா என பல்வேறு மாநில அரசுகள் துரிதப்படுத்தியுள்ளன. கொரோனா தாக்கம் தற்போது சீனா உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் அதிகரித்து வருவதால் கொரோனா முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகள் தற்போது மீண்டும் துவங்கியுள்ளன. இந்தியாவில் மத்திய அரசு மாநிலங்களுக்கு கொரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, கர்நாடக அரசு, உணவகங்கள், மால்கள் போன்ற இடங்களில் முகக்கவசத்தை அணிய கட்டாய படுத்தியுள்ளது. அதே போல, கேரள அரசு கோவிட் … Read more

ராஜஸ்தானில் பாஜக பாத யாத்திரை ரத்து!

ராஜஸ்தானில் ‘ஜன் ஆக்ரோஷ் யாத்திரை’ ரத்து செய்யப்படுவதாக அம்மாநில பொதுச்செயலாளர் அறிவிப்பு. ராஜஸ்தானில் பாஜக மேற்கொள்ளவிருந்த ‘ஜன் ஆக்ரோஷ் யாத்திரை’ ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், மக்கள் நலனை கருத்தில்கொண்டு ‘ஜன் ஆக்ரோஷ் யாத்திரை’ நிறுத்தி வைக்கப்படுவதாக ராஜஸ்தான் மாநில பாஜக பொதுச்செயலாளர் அர்ஜுன் சிங் அறிவித்துள்ளார். மேலும், டெல்லியில் நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி அருண் சிங் கூறுகையில், ராஜஸ்தானில் நடைபெறவிருந்த எங்களது ‘ஜன் ஆக்ரோஷ் யாத்திரை’ நிறுத்தி உள்ளோம். காங்கிரஸ் ராகுல் … Read more

கொரோனா தடுப்பு – பிரதமர் தலைமையிலான ஆலோசனை கூட்டம் தொடக்கம்!

கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் எழுந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை. கொரோனா தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் எழுந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை மிரட்டி வரும் புதிய வகை கொரோனா இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் … Read more

#BREAKING: புதிய வகை கொரோனா – முதலமைச்சர் சற்றுநேரத்தில் ஆலோசனை!

சீனாவை மிரட்டி வரும் புதிய வகை கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் சற்றுநேரத்தில் ஆலோசனை. சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா திரிபு மிக வேகமாக பரவி வரும் சூழலில், டெல்லியில் இன்று மதியம் உயர்நிலை குழுவுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார் பிரதமர் மோடி. இந்த நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று  தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. சீனாவில் பரவி வரும் புதிய வகை … Read more