இருசக்கர வாகனங்களில் வரும் நபர்களுக்கு அனுமதி கிடையாது

Default Image

கோயம்பேடு காய்கனி அங்காடி வளாகத்திற்கு இருசக்கர வாகனங்களில் வரும் நபர்களுக்கு காலை 7:30 மணிக்கு மேல் அனுமதி கிடையாது.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மருந்து கடைகளை தவிர மற்ற கடைகளுக்கு நேரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில்  கோயம்பேடு காய்கனி அங்காடி வளாகத்திற்கு இருசக்கர வாகனங்களில் வரும் நபர்களுக்கு காலை 7:30 மணிக்கு மேல் அனுமதி கிடையாது என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இரு சக்கர வாகனங்களில் காய்கறி வாங்க வருபவர்களுக்கு காலை 4 மணி – 7.30 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்படும். இந்த நேர முறை மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு கிடையாது என்றும் கொரோனா பரவுவதை தடுக்க மக்கள் தங்கள் வசிக்கும் பகுதியிலேயே காய்கனி வாங்க அறிவுறுத்தப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்