கஞ்சாவுக்கு அடிமையான தம்பியை கொன்ற தாய் மற்றும் அண்ணன்.!

Default Image
  • அசாருதீன்  என்பவர் தாய் மற்றும் தந்தையிடம் போதைப்பொருள் வாங்க காசு கேட்டு துன்புறுத்தி வந்துள்ளார்.
  • ஆத்திரமடைந்த தாய் ஹபீபா பேகம் மற்றும் அண்ணன் யாசர் இருவரும் சேர்ந்து அசாருதீன் கை ,கால்கள்  பிடித்து கழுத்தை நெரித்து கொன்றதாக கூறப்படுகிறது.

மதுரை வண்டியூர் சுந்தர் நகர் 2-வது  தெருவை சார்ந்த சிக்கந்தர் மைதீன். இவரது மனைவி ஹபீபா பேகம். இவர்களுக்கு யாசர் அராபத் , அசாருதீன் என்ற இரு மகன்கள் உள்ளனர். இதில் இளைய மகனான அசாருதீன் போதை பொருளுக்கு அடிமையாகி உள்ளார்.

இதனால் அடிக்கடி வீட்டில் வந்து தனது தாய் மற்றும் தந்தையிடம் போதைப்பொருள் அதாவது கஞ்சா வாங்க காசு கேட்டு துன்புறுத்தி வந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தன் அண்ணன் யாசரை தகாத வார்த்தைகள் பேசி பிரச்சினை செய்துவந்து உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தாய் ஹபீபா பேகம் மற்றும் அண்ணன் யாசர் இருவரும் சேர்ந்து அசாருதீன் கை ,கால்கள்  பிடித்து கழுத்தை நெரித்து கொன்றதாக கூறப்படுகிறது. இது குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அசாருதீன் உடலை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்