இங்க ஏன் பலாப்பழம் இருட்டா இருக்கு? வாக்குச்சாவடியில் வாக்குவாதம் செய்த மன்சூர் அலிகான்!

Mansooralikhan

Mansoor Ali Khan : வாக்குச்சாவடியில் தனது பலாப்பழ சின்னம் மீது வெளிச்சம் இல்லை என மன்சூர் அலிகான் வாக்குவாதம்.

இன்று (ஏப்ரல் 19) இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் நாடாளுமன்றம் மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழகத்தில்39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கே  தொடங்கிய நிலையில், பொது மக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாக்கு செலுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில், நடிகர்  மன்சூர் அலிகான், தான் போட்டியிடும் வேலூர் தொகுதியில் , வாக்குகள் பதிவாகும் இடங்களை பார்வையிட்டு வாக்கு அளிக்க வந்த போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  வேலூர் தொகுதியில் மன்சூர் அலிகான் பலாப்பழ சின்னத்தில் போட்டியிடுகிறார்.

எனவே, வேலூர் தொகுதியில் எங்கு எல்லாம் வாக்குகள் பதிவாகும் இடங்கள் இருக்கிறதோ அங்கு எல்லாம் நேரடியாக சென்று பார்வையிட்டார்.  அப்போது வாக்குகள் பதிவாகும் சில இடங்களில் தன்னுடைய பலாப்பழ சின்னம் தெளிவாக தெரியவில்லை ரொம்பவே இருட்டாக இருக்கிறது என்றும் பலாப்பழம் ஏன் இருட்டா இருக்கு? என்றும் கூறி  வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதைப்போல, வாக்கு பதிவு செய்யும் இயந்திரங்கள் இடமும் வெளிச்சத்தில் இல்லை தெளிவான இடத்தில் வைக்கவேண்டும் எனவும்,   சில இடங்களில் தன்னுடைய சின்னம் தெரியாதவாறு, வாக்குகள் பதிவு செய்யும் இயந்திரங்கள் இருட்டில் உள்ளது வேறு இடத்திற்கு உடனே மாற்றுங்கள் என்று கூறி குற்றமும் சாட்டியுள்ளார்.

அதன்பின், கொணவட்டம் பகுதியில் இருக்கும் உள்ள அரசு பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று அங்கு வாக்குப்பதிவு நடைபெறுவதை பார்வையிட்டு தனது வாக்கையும் செலுத்தினார். மேலும், நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று டிஸ்சார்ஜ் ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்