பப்ஜி மதனுக்கு சொகுசு வசதி? – லஞ்சம் கேட்ட ஜெயிலர் பணியிடை நீக்கம்!

Default Image

பப்ஜி மதன் தொடர்பான ஆடியோ விவகாரத்தில் உதவி ஜெயிலர் செல்வம் பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டிஜிபி உத்தரவு.

யூ -டியூப்பில் ஆபாசமான பேச்சுக்களை பேசி வீடியோக்களை பதிவிட்டு வந்த பப்ஜி மதனை, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 18-ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் மதன் மீது கடந்த ஜூலை மாதம் 6-ஆம் தேதி குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

யூடியூப் சேனல்கள் மூலமாக சிறுவர்கள் மற்றும் பெண்கள் அதிகளவில் மனதளவில் பாதிக்கப்படுவதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் புகாரை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில், பப்ஜி மதனுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்துதர அவரது மனைவிடம் லஞ்சம் கேட்ட சிறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பப்ஜி மதனுக்கு புழல் சிறையில் சகல வசதிகளை வழங்க ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்ட பரபரப்பு ஆடியோ வெளியான நிலையில், சிறை அதிகாரி செல்வதை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டிஜிபி சுனில் குமார் சிங் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். மேலும் இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிறைத்துறை டி.ஐ.ஜி. தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்