பரபரப்பு:சாலையோரத்தில் சிதறி கிடந்த வாக்குச்சீட்டுகள்.!

Default Image
  • தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக நடந்த உள்ளாட்சி  தேர்தலுக்கான முடிவுகள் நேற்று மாலை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
  • இன்று பெரம்பலுர் -அரியலூர் சாலையில் உள்ள சித்தளி அருகே சாலையோரத்தில் இளஞ்சிவப்பு நிற வாக்கு சீட்டுகள் கொட்டப்பட்டு இருந்தன.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. நேற்று மாலை வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.அதில் திமுக கூட்டணி  மற்றும் அதிமுக கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. பின்னர் இறுதியாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அதிமுக கூட்டணி விட திமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியதாக அறிவித்தது.

இந்நிலையில் பெரம்பலுர் -அரியலூர் சாலையில் உள்ள சித்தளி அருகே சாலையோரத்தில் இளஞ்சிவப்பு நிற வாக்கு சீட்டுகள் கொட்டப்பட்டு இருந்தன. அந்த இளஞ்சிவப்பு சீட்டுகள் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வேட்பாளர்களை தேர்வு செய்ய பயன்படுத்தப்படும் வாக்கு சீட்டு .

இதுகுறித்து காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு கிடந்த வாக்குச்சீட்டுகளை சேகரித்தனர்.பொதுவாக தேர்தலில் பயன்படுத்தப்பட்ட  வாக்குச்சீட்டுகளை ஆறு மாதம் வரை பாதுகாக்க வேண்டும் என்பது விதிமுறையாகும்.

Image result for சாலையோரத்தில் சிதறி கிடந்த

அப்படியிருக்கையில் தேர்தல் முடிந்த அடுத்த மறுநாளே வாக்குச்சீட்டுகள் ரோட்டோரத்தில் சிதறி  கிடப்பது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மேலும் சிதறிக்கிடந்த வாக்கு சீட்டுகள் வாக்கு எண்ணிக்கையின் போது எண்ணப்பட்டதா..? அல்லது வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே திருடப்பட்டு ரோட்டோரத்தில் வீசப்பட்டதா..? என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்