சாராய விற்பனை – 16 காவலர்களை மாற்றம் செய்து டிஐஜி அதிரடி உத்தரவு!

Default Image

சீர்காழி மதுவிலக்கு அமலாக்க பிரிவு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 16 பேர் கூண்டோடு மாற்றம் செய்து டிஐஜி உத்தரவு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சாராய விற்பனையை தடுக்க தவறியதாக மதுவிலக்கு பிரிவு காவல்துறையினர் 16 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, சீர்காழி மதுவிலக்கு அமலாக்க பிரிவு எஸ்ஐ பார்த்திபன் உள்ளிட்ட 16 போலீசார் கூண்டோடு மாற்றப்பட்டனர். சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் 16 பேரை திருவாரூர், தஞ்சைக்கு மாற்றி டிஐஜி கயல்விழி உத்தரவிட்டார். ஆய்வாளர் கவிதா ஏற்கனவே மாற்றப்பட்ட நிலையில், தஞ்சை சரக டிஐஜி கயல்விழி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்