2 வாரமாக நானே தனிமையில் தான் இருக்கிறேன்! – கமல்ஹாசன்

Default Image

கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிப்ரவரி 15 க்கு பின் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்துள்ளவர்களின் வீடுகள் குறிப்பிட்ட நாட்களுக்கு தனிமைப்படுத்தி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அதனை குறிப்பிடும் வகையில் அந்த வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகிறது. 

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் வீட்டில் தனிமைப்படுத்துதலுக்கான போஸ்டர் ஒட்டப்பட்டது.  பின்னர், பாஸ்போர்ட்டில் இருந்த பழைய முகவரி கொண்டு தவறுதலாக கமல்ஹாசன் வீட்டில் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டுவிட்டது.’ என மாநகராட்சி சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டு, பின்னர் அந்த நோட்டீஸ் அங்கிருந்து அகற்றப்பட்டது.

இது குறித்து கமல்ஹாசன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, ‘ நான் தனிமைப்படுத்தப்பட்டதாக வந்த செய்தி உண்மையில்லை. உண்மையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். ‘ என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்