கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு!!

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் அருகே விஷச் சாராயம் அருந்தி பலரும் உயிரிழந்து வரும் தகவலை பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  தினம்

kallakurichi death

கள்ளக்குறிச்சி :கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் அருகே விஷச் சாராயம் அருந்தி பலரும் உயிரிழந்து வரும் தகவலை பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  தினம் தினம் உயிரிழப்புகள் எண்ணிக்கை அடுத்தடுத்த அதிகரித்து கொண்டே செல்கின்ற காரணத்தால் கள்ளக்குறிச்சி கண்ணீரில் மிதக்கிறது.

நேற்று வரை 59 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியான நிலையில், இன்று காலை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62-ஆக உயர்ந்தது. இதனையடுத்து, அடுத்ததாக தற்போது பலி எண்ணிக்கை 63-ஆக உயர்ந்து உள்ளதாக வெளியான தகவல் மேலும் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

விஷ சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வந்தவர்களில் 74-பேர் நலம்பெற்று வீடு திரும்பியுள்ளனர். மேலும், இதனை தவிர்த்து இன்னும் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் விஷ சாராயம் அருந்திய 47பேரும், சேலம் மருத்துவமனையில் 29 பேர் என மொத்தமாக 88 பேர் சிகிச்சையில் உள்ளனர்என்பதும் குறிப்பிடத்தக்கது.