#JustNow: காவல் ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு! – டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

Default Image

காவல் ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு.

தமிழ்நாட்டில் 91 காவல் ஆய்வாளர்களுக்கு, துணை கண்காணிப்பாளர்களாகவும், காவல்துறை உதவி ஆணையர்களாகவும் பதவி உயர்வு மற்றும் புதிய பொறுப்புகளை வழங்கி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதனிடையே, சென்னையில் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறமையாக செயல்பட்ட ரயில்வே போலீசாரை பாராட்டி சான்றிதழ் வழங்கிய பின் பேசிய டிஜிபி, தமிழகத்தில் கடந்த ஓராண்டில் குற்றங்கள் குறைந்துள்ளன என்றும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் 80 கொலை சம்பவங்கள் குறைந்து உள்ளது எனவும் கூறினார்.

காவல் உதவி செயலியை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், அனைத்து போலீஸ் நிலையங்கள் முன் வரவேற்பு அதிகாரியை நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்றும் அவர் பொதுமக்களை வரவேற்று குறைகளை கேட்கும் வகையில் செயல்படுவார் எனவும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்