சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் நிச்சயம் சலசலப்பு இருக்கும் – கருணாஸ்

Default Image

சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் நிச்சியம் சலசலப்பு ஏற்படும் என்று கருணாஸ் தெரிவித்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சசிகலா பெங்களூரு அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.  4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, ரூ.10 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே,  தகவல் அறியும் சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) பெங்களூருவை சார்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் கேட்ட கேள்விக்கு சசிகலா ஜனவரி மாதம் 27-ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியானது.

அபராதத் தொகையை கட்டத் தவறினால் சசிகலாவின் விடுதலை ஓராண்டு தள்ளிப் போகும் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான வேலைகளில் டிடிவி தினகரன் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் இன்னும் 7 மாதங்களில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. சிறையில் இருந்து வெளியே வரும் சசிகலாவை ஒரு வழியாக பாஜக, அதிமுகவில் இணைத்துவிட்டால், தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பம் ஏற்படும்.

சசிகலா, டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் ஒன்று சேர்ந்தால், அதிமுகவில் யார் தலைமை என்பதே பெரும் கேள்வியாக உள்ளது. ஒரு வேளை இந்த நால்வர் கூட்டணி ஒன்று சேர்ந்தால் நிச்சயம் வரும் சட்டசபை தேர்தல் திமுகவுக்கு கடும் சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் நிச்சியம் பெரும் சலசலப்பு ஏற்படும் என்று கருணாஸ் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live Tamil News
Suriya
Pollachi Sexual Assault case
edappadi palanisamy rs bharathi
Supreme court - Senthil Balaji
suryakumar yadav vk orange cap
Omar Abdullah About Pahalgam Attack