சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

Default Image

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. என் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் முன்னாள் மாணவிகளை தூண்டிவிட்டு பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று சிவசங்கர் பாபா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மாணவிகளுக்கு சிவசங்கர் பாபா அனுப்பிய குறுந்செய்திகளை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்தது. இதன்பின், புகைப்படங்கள் மாஃர்பிங் செய்யப்பட்டவை என சிவசங்கர் பாபா தரப்பில் மறுப்பு தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டுகளின் தீவிரம், ஜாமீன் தந்தால் தலைமறைவாக வாய்ப்பு உள்ளதால் ஜாமீன் வழங்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Govt Employees - Protest
Aadhaar - Rahul Gandhi
NASA astronaut Sunita Williams return
Sunita Williams -Crew 9
ab de villiers and virat kohli
sekar babu tvk vijay