வாகனங்களுக்கு 5 ஆண்டு காப்பீட்டை கட்டாயமாக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

The High Court has ordered compulsory 5-year insurance on a bumper-to-bumper basis for new vehicles from September 1.

செப்டம்பர் 1 முதல் புதிய வாகனங்களுக்கு பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில் 5 ஆண்டுக்கு காப்பீட்டை கட்டாயமாக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டுகள் காப்பீடு செய்வதை கட்டாயமாக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வாகன உரிமையாளர், ஓட்டுநர், பயணி என அனைவரையும் உள்ளடக்கும் வகையில் காப்பீடு இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

காப்பீடு நிறுவனங்களுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும்படி தமிழ்நாடு போக்குவரத்துறை கூடுதல் தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 30-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் தமிழக அரசுக்கு ஆணையிட்டுள்ளது.

புதிய வாகனம் எவ்வாறு இயங்கும் என்பதில் காட்டும் ஆர்வம் காப்பீடு நடைமுறையில் காட்டுவது இல்லை என்றும் காப்பீடு தொடர்பான விவரங்களை விற்பனையாளர்கள் முழுமையாக தெரிவிப்பதில்லை எனவும் வாகன விபத்து இழப்பீடு தொடர்பான வழக்கில் உய்ரநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.