தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!

heavy rain

வடதமிழக கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது அதைப்போல தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக நேற்று மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்துள்ளது.

இதில் கடலூர் மாவட்டத்தில்  ஜனவரி மாதத்தில் பெய்த மழை நிலவரப்படி, கடந்த 130 ஆண்டுகளில் இல்லாத அளவாக தற்போது 13.6 செ.மீ. மழை பதிவக்கியுள்ளது. வரலாற்றில் இது 3- வது அதிகபட்ச மழை என்றும், இதற்கு முன்பு 19.7 செ.மீ. மற்றும் 15.3 செ.மீட்டர் மழை என பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைப்போல, திருச்சி மாவட்டத்தில் லால்குடி, கல்லக்குடி 6.4 மி. மீ, மண்ணச்சநல்லூர் வட்டத்திற்கு சமயபுரம் 3 மி.மீ, உட்பட்ட சிறுகுடி 6 மி. மீ புள்ளம்பாடி 3 மி. மீ  என மழையின் அளவு பதிவாகியுள்ளது.

இந்நிலையில், இன்று (ஜனவரி 9) எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்ற விவரத்தை பார்ப்போம். அதன்படி, தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதைப்போல, தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நாளை (ஜனவரி 10)

தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை கனமழை பெய்யக்கூடும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்