வெளுத்தும் வாங்கும் கனமழை! இந்த மாவட்டத்தில் நாளை விடுமுறை!

கனமழை காரணமாக, நாளை தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Theni School Leave

தேனி : கனமழை காரணமாக, தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி, கன்னியாகுமரி, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக் கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக இன்று கன்னியாகுமரிக்கு விடுமுறை விடப்பட்டது. அதே போல, நிற்காமல் மழை பெய்து வருவதால் தேனி மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மதுரை அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் அந்த மாவட்டங்களுக்கும் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல, கடந்த 22-ம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாளை அதனை ஈடு செய்யும் விதமாக நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்