மாவட்ட ஆட்சியர்களுக்கு பசுமை விருது.. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.1.10 கோடி பரிசு – முதலமைச்சர்

Default Image

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக பசுமை முதன்மையாளர் விருதுகளை வழங்கினார் முதலமைச்சர்.

சென்னை தலைமை செயலகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு பசுமை விருதுகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார். 5 தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்களுக்கு பசுமை முதன்மையாளர் விருதுகளையும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மேலும் இந்நிகழ்வின் போது, முல்லைப்பெரியாறு அணையில் பணிபுரியும் பொறியாளர்களுக்கும், பெரியாறு அணை முகாம், தேக்கடி பணியாளர்கள் ஆகியோருக்கும் செயற்கைகோள் அலைபேசிகளையும் வழங்கினார். இதனைத்தொடர்ந்து, காதுகேளாதோர் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஜெர்லின் அனிகா, பிரித்வி சேகருக்கு ரூ.1.10 கோடி பரிசும் முதல்வர் வழங்கினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்