மக்களின் உணர்வுகளை புரிந்து, தமிழக அரசு செயல்பட வேண்டும் – எம்.பி. திருநாவுக்கரசர்

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை ரூ.3 உயர்த்தி இருப்பதன் மூலம் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார். மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து 12 மாநில சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், இதேபோல் தமிழக சட்டப்பேரவையிலும் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும் மத்திய அரசை கண்டித்து அதிமுக அரசு பயப்படுவதாக விமர்சித்த அவர், மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு தமிழக அரசு செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘அந்த இடத்திற்கு செல்லாததால் தப்பிய தமிழர்கள் 68 பேர்’ – சுற்றுலா சென்ற மதுரை நபர் சொன்ன தகவல்.!
April 23, 2025
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025