சிறந்த சேவைக்காக நாளை டெல்லியில் தமிழகத்தை சார்ந்த 5 அதிகாரிகளுக்கு பதக்கம்.!

Default Image
  • சேவை மற்றும் தனித்திறன் பணிக்காக நாளை குடியரசு தினவிழாவில் பதக்கம் பெற உள்ள 35 சிறைத்துறை பணியாளர்களின் பட்டியல் நேற்று வெளியாகியுள்ளது.
  • அந்த பட்டியலில் தமிழகத்தை சார்ந்த 5 அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற்று உள்ளது.

இந்தியா முழுவதும் நாளை 71-வது குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதை  தொடர்ந்து தலைநகர் டெல்லியில் முப்படை அணிவகுப்பு பல்வேறு மாநிலங்களின் கலை மற்றும் கலாச்சார எடுத்துரைக்கும் வகையில் நடனங்கள் நடைபெற உள்ளன. மேலும் நாளை சிறப்பான சேவைக்காக பதக்கம் வழங்கும் விழாவும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் சிறப்பான சேவை மற்றும் தனித்திறன் பணிக்காக நாளை குடியரசு தினவிழாவில் பதக்கம் பெற உள்ள 35 சிறைத்துறை பணியாளர்களின் பட்டியல் நேற்று வெளியாகியுள்ளது. இவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதக்கம் வழங்க ஒப்புதல் அளித்து உள்ளார்.

அதில் தமிழகத்தை சார்ந்த 5 அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற்று உள்ளது. அதில் வேலூர் சரக டி.ஐ.ஜி  கே .ஜெயபாரதி ,  திருப்பூர் மாவட்ட சிறை ஜெயிலர் தமிழ்மாறன் , பெண்கள் சிறப்பு சிறையின் துணை ஜெயிலர் எம். பேபி , கொக்கிரகுளம் சிறப்பு சப் -ஜெயில் துணை ஜெயிலர்  ஜே.கீதா , அருப்புக்கோட்டை சப்-ஜெயில் உதவி ஜெயிலர் எஸ். கண்ணன் ஆகியோர் சிறந்த சேவைக்கான விருது பெற உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்