சென்னையில் கடும் பனிமூட்டம் காரணமாக 5 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டது.!

Default Image
  • சென்னையிலும் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.
  •  மஸ்கட், ஆஸ்திரேலியா, டெல்லியில் இருந்து  சென்னை வந்த 5 விமானங்கள் ஐதராபாத் , திருவனந்தபுர விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன.

தற்போது வட மாநிலங்களான டெல்லி ,  உத்தரபிரதேசம்,ராஜஸ்தான் போன்ற மாநிங்களில் கடும் பனி நிலவி வருகிறது.இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.மேலும் விமான, சாலை மற்றும் ரயில்வே போக்குவரத்து பாதிக்கப்பட்டது உள்ளது.

இந்நிலையில் சென்னையிலும் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதன் காரணமாக இரவு12 மணி முதல் காலை 8 மணி வரை பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் சாலையில் எதிரே வரும் வாகனங்களை தெரிந்து கொள்ள வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்கை எரிய விட்டபடியே செல்கின்றனர்.

கடுமையான பனிமூட்டம் காரணமாக மஸ்கட், ஆஸ்திரேலியா, டெல்லியில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்த 5 விமானங்கள் ஐதராபாத் , திருவனந்தபுர விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்