பொங்கல் பண்டிகை எதிரொலி – கிடுகிடுவென உயர்ந்த உள்ளூர் விமான டிக்கெட் விலை!

chennai domestic flight

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். வார இறுதி நாட்கள், பொங்கல் பண்டிகை என தொடர் விடுமுறை என்பதால், வெளியூரில் பணிபுரிபவர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இதன் காரணமாக பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் என அனைத்திலும் மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. பொங்கலை முன்னிட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், மக்கள் தங்கள் சொந்த … Read more

மாயமான விமான பாகங்கள் 8 ஆண்டுகளுக்கு பின்னர் மீட்பு!

AN-32(K-2743)

கடந்த 2016ம் ஆண்டு வங்கக்கடல் பகுதியில் காணாமல்போன இந்திய விமானப்படை விமானத்தின் பாகங்கள் 8 ஆண்டுகளுக்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையின் An-32 (K-2743) விமானம், கடந்த 2016 ஜூலை 22ம் தேதி வங்கக்கடல் பகுதியில் ஒரு பணிக்காக சென்றபோது காணாமல் போனது. அதாவது, சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்ற விமானப்படை விமானம், வங்கக்கடல் பகுதியில் மாயமானது. இந்த விமானத்தில் 29 பேர் இருந்தனர். இதனைத்தொடர்ந்து, காணாமல் போன விமானம் மற்றும் … Read more

கதவை திறக்க சொன்னார் இயேசு… 37000 அடி உயர விமானத்தில் அமெரிக்க பெண் செய்த அதிர்ச்சி சம்பவம்.!

அமெரிக்க விமானத்தில் 37000 அடி உயரத்தில் விமானம் பறக்கும் போது ஒரு பெண் பக்கவாட்டு கதவை திறக்க முயற்சித்துள்ளது. அமெரிக்காவின், ஹூஸ்டன்-கொலம்பஸ் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில், விமானம் பறந்து கொண்டிருக்கும் போது ஒரு பெண் அவரது இருக்கைக்கு பக்கவாட்டு கதவை திறக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்குள்ள பணியாட்களால் அப்பெண் தடுத்த நிறுத்தப்பட்டு காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டார். ஹூஸ்டன்-கொலம்பஸ் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானமானது 37,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது, லோம் அக்பெக்னினோ என்ற … Read more

இன்ஜின் கோளாறு காரணமாக டெல்லி விமானம் வேறு இடத்தில் தரையிறக்கம்.. பயணிகள் அவதி…

டெல்லியில் இருந்து குஜராத் சென்ற உள்ளூர் விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணாமாக ஜெய்ப்பூரில் தரையிறங்கி உள்ளது.  சில தினங்களுக்கு முன்னர் தான் இந்தியாவில் இருந்து வெளிநாடு பரந்த தனியார் விமானம், சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்டதை அறிந்திருப்போம். தற்போது அதே போல வேறு ஒரு விமான நிறுவனமான இண்டிகோ நிறுவனத்தின் உள்நாட்டு போக்குவரத்து விமானம் டெல்லியில் இருந்து குஜராஜ் மாநிலம் வடோதரா வுக்கு பறந்தது. ஆனால், அந்த விமானத்தின் இன்ஜினில் சிறு அதிர்வு ஏற்பட்ட … Read more

#Alert:அசானி புயல் எதிரொலி:17 விமானங்கள் ரத்து!

வங்கக்கடலில் தீவிர புயலாக நிலை கொண்டிருந்த அசானி,தற்போது புயலாக வலுவிழந்து,ஆந்திராவின் மசிலிப்பட்டணத்திற்கு தென்கிழக்கே 40 கிமீ தொலைவில் நிலவுகிறது எனவும்,அடுத்த சில மணிநேரத்தில் கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகர்ந்து,மேற்கு மத்திய வங்காள விரிகுடாவை ஆந்திர கடற்கரைக்கு அருகில் காலை 11 மணிக்கு அடையும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்பின்னர்,அசானி புயலானது திசை மாறி ஒடிசா கடலோரத்தை நோக்கி நகர்ந்து நாளை காலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கும் எனவும் இந்திய வானிலை … Read more

ரஷ்ய விமானங்கள் அமெரிக்க வான்வெளியை பயன்படுத்த தடை?..!

ரஷ்ய விமானங்கள் அமெரிக்க வான்வெளியை பயன்படுத்த தடை விதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனில் தொடர்ந்து ரஷ்ய படைகள் உக்கிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன.அந்த வகையில்,தலைநகர் கீவ் பகுதியில் ரஷ்ய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. அதன்படி,நேற்று ரஷ்யா உக்ரைனிலுள்ள உலகின் மிகப்பெரிய கோபுரங்களில் இரண்டாவது இடத்திலுள்ள கீவ் டிவி கோபுரத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.இதில் உக்ரைன் மக்கள் சிலர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனிடையே,உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா மீது பல்வேறு … Read more

#Breaking:உக்ரைனில் இருந்து 249 பேருடன் இந்தியா வந்த 5-வது விமானம்!

உக்ரைனில் இருந்து 249 இந்தியர்கள் 5-வது விமானம் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். உக்ரைனில் தரைப்படை,வான்வழி மற்றும் கப்பல் படைகளை கொண்டு ரஷ்யா உக்கிரமாக தாக்கி வரும் நிலையில்,உக்ரைன் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களையும் ரஷ்யா கைப்பற்றியுள்ளது.இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ள நிலையில்,மேலும் பலர் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்த சூழலில்,உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.அந்த வகையில்,உக்ரைனின் அண்டை நாடுகள் வழியாக … Read more

#BREAKING: தமிழகம் வரும் விமான பயணிகளுக்கு இ-பதிவு கட்டாயம்..!

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் விமான பயணிகளுக்கு இ-பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது ஒமைக்ரான் பரவிவரும் நிலையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் பல புதிய வழிகாட்டு நெறிமுறையை இந்திய விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வெளி மாநில விமான பயணிகளுக்கு இ- பாஸ் கட்டாயம் எனவும் உள்நாட்டு பயணிகளுக்கு தடுப்பூசி சான்றிதழ் & கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கேரளாவில் இருந்து வரும் பயணிகள் முழு தடுப்பு சான்றிதழ் … Read more

BREAKING: Omicron அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச விமான சேவை தள்ளிவைப்பு- டி.ஜி.சி.ஏ. அறிவிப்பு …!

Omicron அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச விமானங்கள் டிசம்பர் 15 முதல் தொடங்கப்படாது என டி.ஜி.சி.ஏ தெரிவித்துள்ளது. டிசம்பர் 15 முதல் சர்வதேச விமான சேவையை தொடங்கும் முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது. இது குறித்து டிஜிசிஏ வெளியிட்ட அறிக்கையில், சர்வதேச பயணிகள் விமான சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து விரைவில் முடிவெடுக்கும். கொரோனா வைரஸின் புதிய மாறுபாடுகள் வெளிப்படுவதைக் கருத்தில் கொண்டு நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக டிஜிசிஏ தெரிவித்துள்ளது. … Read more

தூத்துக்குடியில் இறங்கவேண்டிய விமானம் பத்திரமாக திருச்சியில் தரையிறங்கியது..!

தூத்துக்குடி விமான நிலையத்தில் தனியார் விமானம் ஓன்று  தரை இறங்க முடியாததால் விமானம் திருச்சிக்கு திருப்பி விடப்பட்டது. கனமழை காரணமாக தூத்துக்குடி விமான நிலையத்தில் தனியார் விமானம் ஓன்று  தரை இறங்க முடியாததால் விமானம் திருச்சிக்கு திருப்பி விடப்பட்டது. திருப்பித் திருப்பி விடப்பட்ட தனியார் விமானம் பத்திரமாக திருச்சியில் தரையிறங்கியது. திருச்சிக்கு திருப்பி விடப்பட்ட விமானத்தில் சபாநாயகர் அப்பாவு பயணம் மேற்கொண்டார்.