“தமிழகத்தில் கூடுதலாக பேருந்துகளை இயக்க தாயார்”- அரசு விரைவு போக்குவரத்துக்கு கழகம்!

தமிழகத்தில் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த 4 ஆம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக, தமிழகத்திற்குள் பயணிப்போருக்கு இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்து, முதலில் மாவட்டத்திற்குள்ளான பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி, ஐந்து மாதத்திற்கு பிறகு பேருந்து சேவைகள் தொடங்கியது. சென்னையில் பெரு நகர பேருந்து போக்குவரத்து சேவையும் தொடங்கப்பட்டது. இதன்காரணமாக, அரசு விரைவு பேருந்துகளில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணித்து வருவதாகவும், கடந்த 13 நாட்களில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணித்ததாக பேருந்து போக்குவரத்துக்கு கழகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், தமிழகத்தில் கூடுதலாக பேருந்துகளை இயக்க மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்த வந்த நிலையில், தமிழகத்தில் கூடுதலாக பேருந்துகளை இயக்க அரசு விரைவு போக்குவரத்து கழகம் தாயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.