ஜல்லிக்கட்டு முடிந்த பிறகும் காளைகளுக்கு பரிசோதனை!

Default Image

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பின்பும் காளைகளை பரிசோதிக்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என உறுதி.

ஜல்லிக்கட்டு முடிந்த பிறகும் காளைகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பின்பும் காளைகளை பரிசோதிக்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு விசாரணையின்போது, ஜல்லிக்கட்டு கலாச்சாரத்தின் பகுதியாகும், காளைகள் குழந்தைகள் போல் பராமரிக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட நடைமுறை அவசியமானதா இல்லையா என்று நீதிமன்றம் எவ்வாறு தீர்மானிக்க முடியும்? என தமிழக அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

ஐல்லிக்கட்டிற்கு முன்பு கால்நடை மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்படும் காளைகள், ஐல்லிக்கட்டிற்கு பிறகு பரிசோதனை செய்யப்படுகிறதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், ஜல்லிக்கட்டில் மனித உயிர்கள் பலியாவதாக மனுதாரர்கள் தரப்பு தெரிவித்துள்ளது எனவும் நீதிபதிகள் கூறினர்.

எல்லா செயல்பாடுகளிலும் ஏதோ ஒரு வகையில் மனித உயிர்கள் பலியாகின்றன. வாகனம் ஓட்டும் போது, பழங்கள் இடிந்து விழும்போது என எல்லா இடங்களிலும் மனித வாழ்கை முடிகிறது என தமிழகர் அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்