எலும்புக்கூடு வேடத்தில் பேரணியில் கலந்து கொண்ட திமுக தொண்டர்.!

Default Image
  • திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் பேரணி நடைபெற்று வருகிறது.
  • இந்த பேரணியில் திமுக தொண்டர் ஒருவர் எலும்புக்கூடு வேடத்தில் கலந்து கொண்டு உள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் பேரணியாக  சென்னையில் உள்ள  எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகில் இருந்து புறப்பட்டு புதுப்பேட்டை வழியாக ராஜரத்தினம் ஸ்டேடியம் வரை திமுக சார்பில் பேரணி நடைபெற்று வருகிறது.

இந்த பேரணி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது.இந்த பேரணியில் ப.சிதம்பரம், வைகோ, திருமாவளவன், தயாநிதி மாறன், கனிமொழி, முத்தரசன்,கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்று உள்ளனர்.

இந்நிலையில் பேரணி ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு உள்ளார் .அதில் திமுக தொண்டர் ஒருவர் எலும்புக்கூடு வேடத்தில் பேரணியில் கலந்து கொண்டு உள்ளார்.அந்த தொண்டர் அவரது உடலில் எலும்புக்கூடு போன்ற உருவத்தை கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் வரைந்து தலையில் “சட்ட மசோதாவை திரும்ப பெறு” என்ற வாசகத்தை எழுதி உள்ளார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்