திமுக பிரமுகரை 10 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட வெட்டி கொலை…!

Default Image

மதுரையை சார்ந்த திமுக பிரமுகரான ராஜா என்பவர் நேற்று இரவு பதினோரு மணி அளவில் கே .புதூர் ஜவஹர் நகரில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து  ஓட ஓட வெட்டிக்கொன்று விட்டு தப்பி சென்று விட்டனர்.

இதில் சம்பவ இடத்திலேயே திமுக பிரமுகர் ராஜா உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை வைத்தனர். தொடர்ந்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை வைத்து சந்தேகத்துக்குரிய வகையில் 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு வாடிப்பட்டி சார்ந்த ஸ்ரீதர் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்பு இருப்பதால்  இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில்  போலீசார்  விசாரித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்