புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல்!

Global Investors Meet 2024

சென்னை நந்தம்பாக்கத்தில் இரண்டாவது நாளான இன்று உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழா நடைபெற்று வருகிறது. நிறைவு நாள் நிகழ்ச்சியில் முதலமைச்சர் முக ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, முன்னணி நிறுவன தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

அப்போது, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து, முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகிறது. இதனிடையே,  புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

வங்கி கணக்கில் பொங்கல் பரிசுத்தொகை – தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு!

அதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமையவுள்ள தோல் அல்லாத காலணி உற்பத்தி ஆலைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.ரூ.2, 302 கோடி முதலீட்டில் 20,000 வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தோல் அல்லாத காலணி உற்பத்தி ஆலை அமைகிறது.

இதுபோன்று, விழுப்புரத்தில் ரூ.500 கோடி மதிப்பில் 6,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் காலணி ஆலை அமையவுள்ளது. அதேபோல், பெரம்பலூரில் ரூ.48 கோடி மதிப்பில் 150 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் காலணி ஆலை அமைகிறது. இந்த  திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்