புதிய மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.!

Default Image

கிருஷ்ணகிரியில் புதிய மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளியில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைகிறது. இதற்காக போலுப்பள்ளியில் 25 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.348 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள மருத்துவக்கல்லூரி, மருத்துவமனைக்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். இவ்விழாவில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம் என பல அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்