சாலை தடுப்பில் மோதி கோர விபத்து.! தவெக தொண்டர்கள் 2 பேர் உயிரிழப்பு.! 

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தவெக மாநட்டிற்கு சென்ற கார் விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

Accindent in Trichy - Chennai Highway - TVK Persons 2 died

சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறுகிறது. இதற்கு மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதியில் இருந்து தவெக கட்சி தொண்டர்கள் திரளானோர் மாநாடு நடைபெறும் விக்கிரவாண்டிக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

இன்று திருச்சியில் இருந்து விக்கிரவாண்டி நோக்கி காரில் வந்துகொண்டிருந்த தவெக தொண்டர்கள் 6 பேர், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை அருகே உசேன்பேட்டை  பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவர்கள் சென்ற கார் தடுப்பில் மோதி அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே திருச்சி தெற்கு மாவட்ட தவெக நிர்வாகிகள் 2 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படுகாயமடைந்த மேலும் 2 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்