#Breaking: செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்.! உயர்நீதிமன்றம் உத்தரவு.!

Default Image

திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கி ஏமாற்றியதாக அளித்த புகாரில் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்றம். தேவைப்படும்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி பாஸ்போர்ட்டை காவல்துறையிடம் ஒப்படைக்கவும், மற்றும் தினமும் கையெழுதியிடவும் நிபந்தனை விதித்துள்ளது உயர்நீதிமன்றம்.

செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது அந்தத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். செந்தில் பாலாஜி வீட்டை சோதனையிட மத்தியக் குற்றப் பிரிவு போலீசார் அனுப்பிய நோட்டீசுக்கு தடை கோரிய முறையீட்டை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார் என குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்