#BREAKING: சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை – மருத்துவக் கல்லூரி டீன்களுடன் இன்று முக்கிய ஆலோசனை!

Default Image

சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை உள்ளிட்டவை குறித்து மருத்துவக் கல்லூரி டீன்களுடன் இன்று முக்கிய ஆலோசனை.

அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடன், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று பிற்பகலில் அவசர ஆலோசனை மேற்கொள்கிறார். மதுரை, ராமநாதபுரம் மருத்துவ கல்லூரிகளில் சமஸ்கிருத உறுதிமொழியை மாணவர்கள் ஏற்ற நிலையில், மருத்துவக்கல்லுரி டீன்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது. சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை, மருத்துவக் கழிவுகளை கையாள்வது மற்றும் மருத்துவ கட்டமைப்புகளை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

மதுரை மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதுதொடர்பாக மாணவர்கள் மற்றும் கல்லூரி டீனுடன் மருத்துவ கல்வி இயக்குநர் விசாரணை நடத்திய பிறகு விளக்கம் அளித்திருந்தார். அதேபோல் ராமநாதபுரத்தில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றதாக சர்ச்சை எழுந்த நிலையில், இன்றைய தினம் அனைத்து கல்லூரி டீன்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை நடத்த உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்