#BREAKING: தனியார் பள்ளிகள் ஸ்ட்ரைக் வாபஸ்.. நாளை முதல் அனைத்து பள்ளிகளும் இயங்கும்!

Default Image

தனியார் பள்ளிகள் ஸ்ட்ரைக் வாபஸ் பெறப்பட்ட நிலையில், நாளை முதல் அனைத்து பள்ளிகளும் இயங்கும் என அறிவிப்பு.

தமிழகம் முழுவதும் நாளை முதல் அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி மர்ம முறையில் உயிரிழந்த விவகாரத்தில், அந்த தனியார் பள்ளி சூறையாடப்பட்டது. இதனை எதிர்த்து, தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகள் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டன. இருப்பினும், பள்ளிகளை அரசு அனுமதி இன்றி மூடக்கூடாது என்ற உத்தரவால், பெரும்பாலான பள்ளிகள் இன்று வழக்கம்போல் திறந்து இருந்தன.

இந்த சமயத்தில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், அமைச்சருடன் தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பு நடத்திய பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதில், தனியார் பள்ளிகள் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாளை முதல் அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கும் என தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதனிடையே, தமிழகம் முழுவதும் இன்று 91% தனியார் பள்ளிகள் இயங்கியுள்ளதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மெட்ரிகுலேஷன் பள்ளிகள் 89%, நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் 95%, சி.பி.எஸ்.இ பள்ளிகள் 86% இயங்கியுள்ளதாகவும், மாவட்டம் வாரியாக இன்று இயங்கிய தனியார் பள்ளிகள் விவரங்கள் குறித்தும் வெளியிடப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்