#BREAKING: நிதி இழப்பிற்கு அதிகாரிகளே பொறுப்பு – ஐகோர்ட் உத்தரவு

Default Image

அறுவை சிகிச்சையில் கண்களை இழந்த திருவாரூர் விஜயகுமாரிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவு.

கடமையை செய்ய தவறுவதால் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்புக்கு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளே பொறுப்பு என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நிதி இழப்பை அரசு அதிகாரிகளிடமே வசூலிக்க வேண்டும் என இழப்பீடு தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அறுவை சிகிச்சையில் கண்களை இழந்த திருவாரூர் விஜயகுமாரிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ஜனவரி 10-ஆம் தேதிக்குள் இழப்பீடு தர திருவாரூர் ஆட்சியர், மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கோர்ட் கெடு வைத்துள்ளது. ஜனவரி 10-ஆம் தேதிக்குள் இழப்பீடு தராவிடில் சொத்துக்களை ஜப்தி செய்யவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருட்களை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஆட்சியர் அலுவலகம் மற்றும் மருத்துவமனை தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. திருவாரூர் அரசு மருத்துமனையில் கண் அறுவை சிகிச்சை செய்யும்போது, பார்வை பறிபோனதாக இழப்பீடு தரக்கோரி விஜயகுமாரி வழக்கு தொடுத்திருந்தார். இந்த நிலையில்,  கடமையை செய்ய தவறுவதால் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்புக்கு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளே பொறுப்பு என உத்தரவிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்