#BREAKING: இன்றே இறுதிச்சடங்கு..மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம்?

Default Image

மாணவியின் உடலை மதியம் 2 மணிக்குள் பெற்றுக் கொள்ள பெற்றோர் சம்மதம் என தகவல்.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்தாக கூறப்படுகிறது. மறு பிரேத பரிசோதனை முடிந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மாணவியின் உடலை மதியம் 2 மணிக்குள் பெற்றுக் கொள்ள பெற்றோர் சம்மதம் என தகவல் வெளியாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடல் மறுகூராய்வு செய்யப்பட்டு தற்போது அங்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. உடலை பெற்று இன்றே மாணவிக்கு இறுதிச்சடங்கு நடத்த பெற்றோர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, கடந்த 13-ஆம் தேதி சின்னசேலம் கனியாமூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது பெற்றோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுந்திருந்தனர். பெற்றோர் விருப்பப்படி மாணவியின் உடல் மறு கூராய்வுக்கு உத்தரவிடப்பட்டது. இதில் மறு கூராய்வு செய்யும்போது தங்கள் மருத்துவரை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்த நிலையில், இதற்கு அனுமதி கிடையாது என நீதிமன்றம் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.

இதனைதொடர்த்து, மாணவி மரணம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை தந்தை ராமலிங்கம் நாடினர். அந்த மனுவையும் உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், மாணவியின் உடலை பெற்றுக் கொள்ள பெற்றோர் சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 9 நாட்களாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாணவியின் சடலம் வைக்கப்பட்டுள்ளது. சென்ற 14-ஆம் தேதி முதல் மருத்துவ உடற்கூறாய்வு நடைபெற்றது. இதன்பின் நீதிமன்ற உத்தரவுக்கு பின் மீண்டும் நேற்று முன்தினம் மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்