#BREAKING: 25 மின்சார கார்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!

Default Image

சென்னையில் 25 மின்சார கார்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின். 

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் புதிய திட்டங்களை முதலமைச்சர் முக ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தே தொடக்கி வைத்தார். அதன்படி, தமிழ்நாடு மசு கட்டுப்பாட்டு வாரியம் அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 25 மின்சார வாகனங்களை முதலமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார். சுமார் 3.42 கோடி மதிப்பில் மொத்தம் 25 மின் வாகனங்கள் அலுவலர்களின் பயன்பாட்டிற்காக வாங்கப்பட்டு, தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, காணொளி காட்சி மூலமாக பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அதேபோல சில விருதுகளையும் முதல்வர் வழங்கவுள்ளார். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு மூன்று மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு பசுமை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, 5 தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பசுமை முதன்மையாளர்கள் விருதுகளையும் வழங்கவுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்