மிக பெரிய அமெரிக்க கடற்படை போர்க்கப்பல் சென்னைக்கு வருகை.!

Default Image

அமெரிக்க கடற்படையின் மிக பெரிய போர்க்கப்பலான மிட்ஜெட் கப்பல், சென்னை துறைமுகத்திற்கு வந்துள்ளது வரும் 19ஆம் தேதி வரையில் சென்னையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. 

அமெரிக்க கடற்படையின் சேனாதிபதியாக திகழும், மிட்ஜெட் கப்பல், இந்தோ பசுபிக் கடல் எல்லையை பாதுகாக்கும் வண்ணம் வலம் வருகிறது. அப்படி தற்போது இந்த கப்பல் சென்னை துறைமுகம் வந்துள்ளது.

இந்தியா – அமெரிக்கா கடற்படை கூட்டுறவை வலுப்படுத்தவே, அமெரிக்க கப்பலின் இந்திய வருகை இருக்கிறது என கூறப்படுகிறது. இரு நாட்டு இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த மிட்ஜெட் கப்பல் இந்தியாவில், சென்னை துறைமுகத்தில் நங்கூரம் போட்டுள்ளது.

நேற்று (16ஆம் தேதி) வந்த இந்த கப்பல், 4 நாட்கள் இங்கு செண்ண்னையில் இருக்க உள்ளதாம். வரும் 19ஆம் தேதி வரையில் சென்னை துறைமுகத்தில் இந்த போர்க்கப்பல் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்த கப்பலில் அதிநவீன ரேடார் வசதி, வலுவான பாதுகாப்பு அம்சங்கள், சிறந்த தகவல் தொடர்பு ஆகியவை இந்த கப்பலில் இருக்கும் என கூறப்படுகிறது. இதுதான் அமெரிக்க போர் கப்பலில் மிக பெரியது என்பதும் குறிப்பிடத்தக்கது . இதே போல 2019ஆம் ஆண்டு, அமெரிக்க கப்பல் ஸ்ட்டெட்டன் ன் இந்தியா வந்துள்ளது குறிப்பிடத்தக்கது..

அண்மையில், இலங்கைக்கு சீன கப்பல் வந்த பிறகு, அமெரிக்க கடற்படை கப்பல் இந்தியா வந்துள்ளது, சரவதேச அளவில் பேசுபொருளாக மாறி இருக்கிறது .

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்